இரண்டு தினங்களுக்கு மதுபானசாலைகளுக்கு பூட்டு!

இலங்கை முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் எதிர்வரும் திங்கட்கிழமை மூடுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை (25) நத்தார் பண்டிகை கொண்டாடப்படவுள்ளதால், இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்

இரண்டு தினங்களுக்கு மதுபானசாலைகளுக்கு பூட்டு!

இலங்கை முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் எதிர்வரும் திங்கட்கிழமை மூடுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை (25) நத்தார் பண்டிகை கொண்டாடப்படவுள்ளதால், இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்

அத்துடன், 26 ஆம் திகதியும் போயா தினத்தை முன்னிட்டு மதுபானசாலைகள் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் அங்கீகரிக்கப்பட்ட நட்சத்திர விடுதிகளில் உள்ள மதுபானசாலைகள் மூடப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.