ட்ரோன் தாக்குதலில் வணிகக் கப்பல் சேதம்!

ட்ரோன் தாக்குதல் ஒன்றின் மூலம் இந்தியப் பெருங்கடலில் ஒரு வணிகக் கப்பல் சேதமடைந்துள்ளது.

ட்ரோன் தாக்குதலில் வணிகக் கப்பல் சேதம்!

ஆனால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று கடல்சார் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இந்த கப்பல் இஸ்ரேலுடன் இணைக்கப்பட்ட கப்பல் என்று அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. 

குஜராத் கடற்கரையில் இடம்பெற்றுள்ள இந்த உரிமை கோரப்படாத தாக்குதலால் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது என்று பிரித்தானிய இராணுவத்தின் ஐக்கிய இராச்சிய கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் கடல்சார் பாதுகாப்பு நிறுவனமான ஆம்ப்ரே கூறியுள்ளது. 

கப்பலில் சில கட்டமைப்பு சேதங்களும் பதிவாகியுள்ளன. 

 முன்னதாக இந்தக்கப்பல் சவூதி அரேபியாவுக்கு சென்றநிலையில் இந்திய துறைமுகத்துக்கு அழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் சம்பவம் தொடர்பில் இந்திய கடற்படை எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை.