பெலியத்த சம்பவம் - ரீ-56 துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது!

பெலியத்த சம்பவம் - ரீ-56 துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது!

தெற்கு அதிகவேக வீதியின் பெலியத்த நுழைவாயில் பகுதியில் துப்பாக்கிச் சூட்டை நடத்தி 5 பேரை கொலை செய்த சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ரீ-56 துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் முன்னெடுத்த விசாரணையின் அடிப்படையில் குறித்த சந்தேகநபர் கொஸ்கொட பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கைதானவர் கொஸ்கொட சுஜின் உதவியாளர் என விசாரணையில் தெரியவந்துள்ளது. 

அவரது வீட்டில் முன்னெடுக்கப்பட்ட சோதனையில் மண்ணில் புதைக்கப்பட்டிருந்த கொலைச் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் ரீ- 56 துப்பாக்கி மற்றும் 32 தோட்டக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

தெற்கு அதிகவேக வீதியின் பெலியத்த நுழைவாயில் பகுதியில் அண்மையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அபே ஜன பலய  கட்சியின் தலைவர் உள்ளிட்ட 5 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது