காரைநகரில் உத்தேச நீர் சுத்திகரிப்பு நிலையத்தை பார்வையிட்ட சீனத்தூதுவர்!

யாழ்ப்பாணம் -  காரைநகர் - சாம்பலோடை சீன அரசின் உதவியுடன் நிர்மாணிக்கப்படவுள்ள நீர் சுத்திகரிப்பு நிலைய வளாகத்தை இலங்கைக்கான சீனத்தூதுவர் கி ஸென் ஹொங் பார்வையிட்டுள்ளார். 

காரைநகரில் உத்தேச நீர் சுத்திகரிப்பு நிலையத்தை பார்வையிட்ட சீனத்தூதுவர்!

யாழ்ப்பாணம் -  காரைநகர் - சாம்பலோடை சீன அரசின் உதவியுடன் நிர்மாணிக்கப்படவுள்ள நீர் சுத்திகரிப்பு நிலைய வளாகத்தை இலங்கைக்கான சீனத்தூதுவர் கி ஸென் ஹொங் பார்வையிட்டுள்ளார். 

இந்த நிகழ்வில் உள்ளுராட்சிமன்ற ஆணையாளர், பிராந்திய உள்ளுராட்சி ஆணையாளர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இச் சந்திப்பில் சீன அரசாங்கத்தின் உதவித் திட்டம் தொடர்பில் தூதுவரினால் மக்களுக்கு விளக்கமளித்ததுடன் பொதுமக்களின் தேவைகள் தொடர்பிலும் கேட்டறிந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் சீனத்தூதுவர் பொதுமக்களால் மாலை மற்றும் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.