சமன் ரத்நாயக்க  தாமாகவே முன்வந்து வாக்குமூலத்தை வழங்க  நீதிமன்றம் அனுமதி!

சமன் ரத்நாயக்க  தாமாகவே முன்வந்து வாக்குமூலத்தை வழங்க  நீதிமன்றம் அனுமதி!

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க  தாமாகவே முன்வந்து வாக்கு மூலத்தை வழங்க  நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் 4 ஆம் திகதி அவர் தமது வாக்குமூலங்களை வழங்க முடியும் என மாளிகாகந்த நீதவான் லோச்சனி அபேவிக்ரம தெரிவித்துள்ளார்.

தரமற்ற இம்யூனோகுளோபுளின் தடுப்பூசி இறக்குமதி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர், குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் நேற்று முன்னிலையாகிருந்தார். 

அவரிடம் சுமார் 8 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பெறப்பட்ட நிலையில் அவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டிருந்தார்.