மின் கட்டணத்தை 20 சதவீதம் குறைக்க முடியும்!

மின் கட்டணத்தை 20 சதவீதம் குறைக்க முடியும்!

மின்சாரக் கட்டணத்தை 10 முதல் 20 வீதம் வரை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும்,மின்சார சபையை மறுசீரமைத்தால் மின்சாரம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் எனவும், இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் தனுஷ்க பராக்கிரமசிங்க இன்று (29) தெரிவித்தார்.

இந்த வருடத்தின் இரண்டாவது மின் கட்டண திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான பிரேரணையை ஜூலை 01ஆம் திகதி மின்சார சபை மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கவுள்ளதாகவும், அங்கு கணிசமான மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் எனவும் தனுஷ்க பராக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ள மின்சார சபை மறுசீரமைப்பு சட்டத்தின் மூலம் மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு தேவையான ஏற்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவித்த அவர், வெளிநாட்டு நிறுவனங்களின் தேவைக்கேற்ப மின்சார சபையின் தற்போதைய நிர்வாகம் ஏற்கனவே செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.