டுபாயில் தலைமறைவாகியுள்ள கொஸ்மல்லியின் உதவியாளர்கள் நால்வர் கல்கிசையில் கைது!

டுபாயில் தலைமறைவாகியுள்ள திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் கொஸ்மல்லியின் உதவியாளர்கள் நால்வர் கல்கிசை மோசடி தடுப்புப் பிரிவினரால் இன்று கைதுசெய்யப்பட்டனர்.

டுபாயில் தலைமறைவாகியுள்ள கொஸ்மல்லியின் உதவியாளர்கள் நால்வர் கல்கிசையில் கைது!

சந்தேகநபர்கள் குற்றச்செயலொன்றை மேற்கொள்வதற்காக, வாள்களுடன் சென்றுக் கொண்டிருந்த போது கைதாகியுள்ளனர்.

இவர்கள், தெஹிவளை - ஓபன் பிளேஸ் பகுதியில் திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் இருவரை இலக்கு வைத்து கடந்த ஓகஸ்ட் 19ஆம் திகதி நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்களென விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் அவர்கள் இருவரும், உயிர்த்தப்பினர்.

எனினும், குறித்த சந்தேகநபர்கள் இருவரும், நீதிமன்றத்துக்கு வருகை தரவுள்ளதாக கிடைத்த தகவலுக்கமைய, அவர்களை கொலை செய்வதற்கு, இந்த சந்தேகநபர்கள் நால்வரும் திட்டமிட்டிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட நால்வரும் 35 முதல் 45 வயதுக்கும் இடைப்பட்ட கல்கிசை, பட்டோவிட்ட பகுதியைச் சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்தனர்.