பல்லாயிரம் மக்களின் கண்ணீருடன் ஈரானிய ஜனாதிபதியின் இறுதி ஊர்வலம்!

ஈரானிய ஜனாதிபதி மற்றும் வெளியுறவு அமைச்சருக்கான இறுதி ஊர்வலம் வடமேற்கு ஈரானில் ஆரம்பமாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரானின் ஜோல்பா நகருக்கு அருகில் உள்ள மலைப் பகுதியில் உலங்கு வானூர்தி விழுந்ததில், இப்ராஹிம் ரைசி(Ebrahim Raisi), மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன்(Hossain Ameer Abdullah) ஆகியோர் நேற்று உயிரிழந்திருந்தனர்.

இந்நிலையில், ஈரானில் 5 நாட்களுக்கு துக்க தினம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதோடு,  இலங்கை உள்ளிட்ட பல்வேறுநாடுகளில் துக்க தினமாகவும், தேசிய கொடி அரைக்கம்பத்திலும் பறக்கவிடப்பட்டுள்ளது.