ஆண் குரலில் பேசிய பெண்ணுடன் மலர்ந்த காதல் - நீதவான் வழங்கிய உத்தரவு!

ஆண் குரலில் பேசி பெண்ணுடன் காதல் - முறையற்ற படங்களை வெளியிட்ட பெண்ணுக்கு விளக்கமறியல்.

ஆண் குரலில் பேசிய பெண்ணுடன் மலர்ந்த காதல் - நீதவான் வழங்கிய உத்தரவு!

தன்னை ஒரு இளைஞராக இனங்காட்டி, 15 வயதுடைய ஒருவருடன் காதல் தொடர்புகளை பேணியதுடன், அவரது முறையற்ற படங்களை பெற்று சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட குற்றச்சாட்டில் கைதான யுவதியொருவர் எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த யுவதி நேற்றைய தினம் மாத்தறை நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டதையடுத்து, இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இருவரும் சமூக வலைதளங்கள் மூலம் சுமார் ஒரு வருடமாக காதல் தொடர்பினை பேணிவந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சந்தேகநபரான யுவதி கைதுசெய்யப்பட்டதையடுத்தே தன்னிடம் இளைஞராக காதல் தொடர்புகளை பேணிவந்த நபர், ஒரு யுவதியென பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தெரியவந்துள்ளது.

கலென்பிந்துனுவெவ பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய குறித்த யுவதி சமூக ஊடகங்கள் மூலம் மாத்தறை பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுமியுடன் தொடர்புகளை பேணிவந்துள்ளார்.

தொலைபேசியில் அவர் ஆண் ஒருவரின் குரலில் பேசியுள்ளதாகவும் தெரிவந்துள்ளது.

இந்தநிலையில், தம்மை சந்திப்பதற்கு குறித்த சிறுமி மறுத்தமையினால் சந்தேகநபரான யுவதி அவரிடமிருந்து பெற்ற முறையற்ற படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.