கொங்கோவில் துப்பாக்கிச் சூடு: 13 பேர் உயிரிழப்பு!

கொங்கோ குடியரசில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒன்பது சிறுவர்கள் உட்பட 13 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொங்கோவின் கிழக்கு இடூரி மாகாணத்தில் நயகோவா என்ற கிராமத்தில் இரங்கல் நிகழ்வு ஒன்றிற்காக பொதுமக்கள் கூடியிருந்த போது இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கி சூடு நடத்தியவர் கொங்கோ குடியரசின் இராணுவ சிப்பாய் ஒருவர் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அவரை அந்த நாட்டு காவல்துறையினர் தேடி வருவதாகவும் தெரிக்கப்படுகிறது.

துப்பாக்கி பிரயோகத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக கொங்கோ குடியரசின் இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.