சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு - நால்வர் கைது!

சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு - நால்வர் கைது!

தோட்டத்தில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 04 சந்தேக நபர்கள் ஹட்டன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹட்டன் காவல்துறை பிரிவிற்குட்பட்ட வனராஜா வத்தை மேல் பகுதியிலுள்ள தோட்டம் ஒன்றில் குறித்த 04 சந்தேகநபர்களும் மாணிக்கக்கல் அகழ்வதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது சந்தேகநபர்கள் நால்வரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளதாகவும், அவர்களிடமிருந்து பல உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.