வவுனியா சிறை கைதிகளுக்கு சின்னம்மை நோய் : உறவினர்கள் பார்வையிட தடை!

வவுனியா சிறைச்சாலையில் உள்ள பெரும்பாலான கைதிகளுக்கு சின்னம்மை நோய் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா சிறை கைதிகளுக்கு சின்னம்மை நோய் : உறவினர்கள் பார்வையிட தடை!

இதனால், 14 நாட்களுக்கு உறவினர்கள் கைதிகளை பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, யாழ் - மானிப்பாயில் 04 ஆமைகளுடன் 02 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் இளவாலை மற்றும் யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த 32 மற்றும் 47 வயதுடையவர்கள் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்கள் இருவரும் நேற்று (31) மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.