புலமைப்பரிசில் பரீட்சையின்போது இடையூறுகள் ஏற்படாதிருக்க விசேட ஏற்பாடு!

புலமைப்பரிசில் பரீட்சையின்போது இடையூறுகள் ஏற்படாதிருக்க விசேட ஏற்பாடு!

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை நாளை 15ஆம் திகதி நடைபெறவுள்ளதால், அன்றைய தினம் அவசர அனர்த்த சூழல் ஏற்படுமாயின் மாணவர்களை இடையூறின்றி பரீட்சை நிலையங்களுக்கு அழைத்துச் செல்வதற்கான விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. 

ஏதேனும் அனர்த்த நிலை காரணமாக பரீட்சை நிலையங்களுக்குச் செல்வதில் மாணவர்களுக்கு சிரமம் ஏற்பட்டால் 117 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்கு அறிவிக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. 

பாதிக்கப்படும் மாணவர்களுக்குத் தேவையான உடன் நடவடிக்கைகளை அதிகாரிகள் விரைந்து மேற்கொள்வதற்கு தயார் என தெரிவித்துள்ளது.