மகனின் தற்கொலை முயற்சியறிந்து அதிர்ச்சியில் தந்தை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் - கோப்பாய் பகுதியில் தனது மகன் உயிரை மாய்க்க முயன்ற தகவல் அறிந்து மயங்கி விழுந்த ஒருவர் தந்தை உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

மகனின்  தற்கொலை முயற்சியறிந்து அதிர்ச்சியில் தந்தை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் - கோப்பாய் மத்தியைச் சேர்ந்த முத்துத்தம்பி விவேகானந்தன் (71) என்பவரே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் இரண்டாவது மகன் நேற்றைய தினம் தவறான முடிவெடுத்து தனது தற்கொலைக்கு முயன்ற நிலையில் காப்பாற்றப்பட்டு , யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த தகவலை வீட்டில் இருந்த தந்தை அறிந்தவுடன் மயக்கமுற்று சரிந்துள்ளார்.

அதனை அடுத்து அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது , அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் அறிவித்துள்ளனர்.

அதேவேளை, சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மகன் யாழ்.போதனா வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக செய்தியாளர் தெரிவித்தார்.