வவுனியா - நெளுக்குளம் பகுதியில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்பு!

வவுனியா - நெளுக்குளம் பகுதியில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்பு!

வவுனியா - நெளுக்குளம் பகுதியில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியிலுள்ள குளம் ஒன்றில் இன்று காலை (10) முதியவர் ஒருவரின் சடலம் இருப்பதை அவதானித்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் சடலத்தை மீட்டுள்ளதுடன் விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

அத்துடன், குறித்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது