வத்தளை 3 கிலோவுக்கும் அதிக ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது!

வத்தளை 3 கிலோவுக்கும் அதிக ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது!

வத்தளை பகுதியில் 3 கிலோகிராமுக்கும் அதிக நிறையுடைய ஐஸ் ரக போதைப் பொருளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறை ஊடகப்பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

காவல்துறை போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பின் போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சேதவத்தை மற்றும் மட்டக்குளி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 27 மற்றும் 31 வயதுடைய இருவரே இவ்வாறு கைதாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.