பதுளையில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் - ஒருவர் பலி!

பதுளை – எகொடபிட்டிய பகுதியில் இரண்டு குழுக்களுக்கிடையில் இன்று இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார்

பதுளையில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் - ஒருவர் பலி!

இந்த மோதல் சம்பவத்தில் மேலும் இரண்டு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோதலின் போது தம்பகஹாவத்தை பகுதியை சேர்ந்த 41 வயதுடைய நபர் ஒருவர், ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக குறிப்பிடப்படுகின்றது. 

தாக்குதலில் காயமடைந்த இருவரும் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் 

சந்தேகநபர்கள் இரண்டு பேரும் குறித்த பகுதியை விட்டு தப்பிச்சென்றுள்ள நிலையில் அவர்களை தேடும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.