மேல் மாகாணத்தில் டெங்கு நோயாளர்கள் பதிவாகும் வீதம் அதிகரிப்பு!

மேல் மாகாணத்தில்  டெங்கு நோயாளர்கள் பதிவாகும் வீதம் அதிகரிப்பு!

இலங்கையில் பதிவான டெங்கு நோயாளர்களில் 37 வீதமானோர் மேல் மாகாணத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

2024ல் இதுவரையான காலப்பகுதிக்குள் 26,803 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சமூக சுகாதார நிபுணர், வைத்தியர் லஹிரு கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பொசன் பூரணை தினத்தின் பின்னர் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.