நாட்டின் சில பகுதிகளில் இன்றும் மழை

நாட்டின் சில பகுதிகளில் இன்றும் மழை

நாட்டின் சில பகுதிகளில் இன்று (26) 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, தென் மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.