யாழ். பல்கலையில் மோதல் - இருவர் சிகிச்சை பிரிவில் அனுமதி
![யாழ். பல்கலையில் மோதல் - இருவர் சிகிச்சை பிரிவில் அனுமதி](https://tamilvisions.com/uploads/images/202502/image_870x_67a97088c91e8.jpg)
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீட மாணவர்களிடையே நேற்யை தினம் மோதல் ஏற்பட்டுள்ளது.
இதனால், காயமடைந்த இரு மாணவர்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
நேற்றைய தினம் புதுமுக மாணவர்களின் வரவேற்பு நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது 3ஆம் மற்றும் 4 ஆம் ஆண்டு மாணவர்களிடையே முறுகல் நிலை ஏற்பட்டு பின்னர் கைகலப்பு ஏற்பட்டது.
இதன்போது ஏற்பட்ட மோதலிலேயே இரண்டு மாணவர்கள் காயமடைந்த நிலையிலேயே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.