மஸ்கெலியா - சாமிமலை தோட்டத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மஸ்கெலியா - சாமிமலை தோட்டத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மஸ்கெலியா - டஸ்பி சாமிமலை தோட்டத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய, இன்று காலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

40 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவர் உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

சம்பவம் தொடர்பில், காவல்துறை விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.