இரத்து செய்யப்படவுள்ள இலட்சக்கணக்கான சாரதி அனுமதிப்பத்திரங்கள்!

இரத்து செய்யப்படவுள்ள இலட்சக்கணக்கான சாரதி அனுமதிப்பத்திரங்கள்!

அடுத்த மூன்று மாதங்களுக்குள் 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் கனரக வாகன சாரதிகளுக்கு வழங்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரங்களை இரத்துச் செய்ய மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.

பழைய சாரதி அனுமதிப்பத்திரங்கள் அனைத்தையும் இரத்துச் செய்வதன் கீழ் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த காலங்களில் அச்சிட முடியாமல் குவிந்து கிடக்கும் 3 இலட்சம் சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடும் பணி அடுத்த சில மாதங்களுக்குள் நிறைவடையும் எனவும் மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்