கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு!

கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு!

கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களுக்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் முக்கிய அறிவிப்பொன்றை அறிவித்துள்ளது.

குறித்த அறிவிப்பில் முன்பதிவு செய்யப்பட்ட கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்கள் மட்டுமே குடிவரவு மற்றும் குடியகல்வு தலைமை அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்பதிவு செய்யாமல் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பதிவு செய்ததன் பின்னர் முன்னுரிமை அடிப்படையில் கடவுச்சீட்டைப் பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும் எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது.