மக்கள் வங்கி வெளியிட்டுள்ள மறுப்புச் செய்தி!

மக்கள் வங்கி வெளியிட்டுள்ள மறுப்புச் செய்தி!

மக்கள் வங்கி ஊழியர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், தமது வங்கிக் கிளையொன்றில் நிலையான வைப்பு நிதியில் மோசடி இடம்பெற்றுள்ளமை குறித்து விசாரணை  இடம்பெறுவதாகவும் வௌியான செய்தியை அந்த வங்கியின் தலைமையகம் மறுத்துள்ளது.

குறித்த செய்தியானது முற்றிலும் பொய்யானது என்றும் தமது நிர்வாகத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக உள்ளது என்றும் மக்கள் வங்கியின் ஊடக பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அது மட்டுமல்லாது இது சம்பந்தமாக 2024 யூன் 13  குற்றச்செயல் விசாரணைத் திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவிட்டுள்ளதாகவும் இவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.