உயர்தர பரீட்சை பெறுபேறு மீள்திருத்த விண்ணப்பம் கோரல்...

உயர்தர பரீட்சை பெறுபேறு மீள்திருத்த விண்ணப்பம் கோரல்...

நேற்று வெளியான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளின் மீளாய்வு எதிர்வரும் 05 ஆம் திகதி தொடக்கம் 19 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியுமென அறிவித்தல் வெளியாக உள்ளது.

பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு கல்வி பொதுத் தராதர உயர் தர பரீட்சை பெறுபேறுகள் நேற்று வெளியாக உள்ளன.

பரீட்சை பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk எனும் இணையத்தள முகவரிக்குள் பிரவேசித்து அறிந்துகொள்ள முடியும்.

இதேவேளை, 2023 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தர பரீட்சை கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்றிருந்த நிலையில் 346,976 பரீட்சாத்திகள் நாடு முழுவதிலுமிருந்து தோற்றியிருந்தனர்.