பாடசாலைகள் நாளை திறப்பு மற்றும் மூடல் பற்றிய அறிவிப்பு!

பாடசாலைகள் நாளை திறப்பு மற்றும் மூடல் பற்றிய அறிவிப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக மூடப்பட்ட காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தென் மாகாண கல்விச் செயலாளர் தெரிவித்துள்ளார்

மாத்தறை மற்றும் காலி மாவட்டங்களில் இடர் முகாமைத்துவ நிலையங்களாக இயங்குகின்ற பாடசாலைகளை தவிர்த்து ஏனைய பாடசாலைகள் வழமை போல் நாளை தினம் (2044.06.06) இயங்கும் என தென்மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ரஞ்சித் யாப்பா தெரிவித்துள்ளார்.

வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் தவிர்ந்த பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளே இவ்வாறு ஆரம்பிக்கப்படவுள்ளன.

இரத்தினபுரி கல்வி வலயம், இரத்தினபுரி, குருவிட்ட மற்றும் எஹெலியகொட ஆகிய பிரிவுகளிலும், நிவித்திகல பிரதேசத்தின் அலபாத மற்றும் அயகம பிரிவுகளிலும் உள்ள பாடசாலைகள் நாளை (06) நடைபெறாது என சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கொட்டிகாவத்தை மற்றும் கொலன்னாவ கல்வி வலயங்களில் உள்ள பாடசாலைகள் மற்றும் நிவாரண முகாம்களாக இயங்கும் பாடசாலைகள் நாளை (6) மூடப்படுமென மேல் மாகாண ஆளுநர் தெரிவித்தார்.