தரம் ஒன்று மாணவர் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

தரம் ஒன்று மாணவர் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

பிறப்பு வீதம் வீழ்ச்சியடைந்ததன் விளைவாக தரம் ஒன்றிற்கான மாணவர் சேர்க்கை வீழ்ச்சியடைந்து வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

“சில வருடங்களுக்கு முன்னர் 330,000 ஆக இருந்த இலங்கையின் வருடாந்த பிறப்பு வீதம் தற்போது குறைந்துள்ளது. 

இதனால் எதிர்காலத்தில் தரம் ஒன்று மாணவர் சேர்க்கை குறையும்,” என்றார்.

இலங்கையில் பிள்ளைகள் பாடசாலைகளை விட்டு விலகி தனியார் வகுப்புகளை நோக்கி இழுக்கப்படுகின்றனர்.

ஏனெனில் நாட்டின் கல்வி முறையின் மீது பிள்ளைகள் நம்பிக்கை இழந்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.