சிறுவனை கொடூரமாக தாக்கிய தந்தை மற்றும் இரண்டு பெண்கள் கைது!

சிறுவனை கொடூரமாக தாக்கிய தந்தை மற்றும் இரண்டு பெண்கள் கைது!

முல்லைத்தீவு - மணலாறு (வெலிஓய) பகுதியில் சிறுவனை கண்மூடித்தனமாக தாக்கிய தந்தை உட்பட இரண்டு பெண்களும் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுவன் முல்லைத்தீவு - மாஞ்சோலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்

பிள்ளையை தாக்கிய தந்தையான அபேரத்ன என்பவர் கைது செய்யப்பட்டு முல்லைத்தீவு நீதிமன்ற நீதவானிடம்  முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இவர்கள் அனைவரும் புல்மோட்டை அரிசி மலைப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைக்காக முல்லைத்தீவுக்கு அழைத்து வரப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது குறித்த சிறுவனின் தாயும்.. அவனை தாக்கிய தந்தை தகாத உறவு வைத்திருந்த பிறிதொரு பெண்ணும் அதே வீட்டில் தங்கியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.​ை

குறித்த இரண்டு பெண்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.