பலாங்கொடை மண்சரிவில் காணாமல் போன நால்வரை தேடும் பணியில் இராணுவத்தினர் தீவிரம்!

பலாங்கொடை பகுதியில் நேற்றரவு மண்சரிவில் சிக்கி காணாமல் போன நால்வரையும் தேடும் பணிகளில் இராணுவத்தினர் தீவரமாக ஈடுபட்டுள்ளனர்.

பலாங்கொடை மண்சரிவில்  காணாமல் போன நால்வரை தேடும் பணியில் இராணுவத்தினர் தீவிரம்!

இராணுவத்தினர் இன்று காலை முதல் தேடுதல் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பலாங்கொடை – கவரன்ஹேன – வெயின்தென்ன பகுதியில் நேற்றிரவு ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி நால்வர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை, இரண்டு பிள்ளைகளே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.