கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் பலி !

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் பலி !

பலாங்கொடை – பெட்டிகல பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் காயமடைந்த மேலும் இருவர் இரத்தினபுரி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பலாங்கொடை – பெட்டிகலவத்த பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இரு குழுக்கள் இடையே நிலவிய முரண்பாடு காரணமாக இந்த சம்பவம் நேர்ந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.