தேர்தல் சூட்டுடன் ஹட்டன் நகரில் திருட்டு மக்களை அவதானமாக இருக்குமாறு பொலிஸார் வேண்டுகோள்!

தேர்தல் சூட்டுடன் ஹட்டன் நகரில் திருட்டு மக்களை அவதானமாக இருக்குமாறு பொலிஸார் வேண்டுகோள்!

தேர்தல் சூட்டுடன் ஹட்டன் நகரில் திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் மணிகூட்டு கோபுரத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள தளபாடங்கள், இலத்திரனியல் பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றில் இன்று 20 ம் திகதி நல்லிரவில் இடம்பெற்றுள்ளதாகவும், இந்த கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கைகடிகாரங்கள் உட்பட பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த திருட்டு சம்பவம் குறித்து ஹட்டன் பொலிஸார் மோப்ப நாயின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும், திருடர்கள் கடை பின்புறமாக கடையினுள் நுழைந்துள்ளதாகவும்,சம்பவம் தொடர்பாக கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவில் காணொளிகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளன.

கடையில் என்னென்ன பொருட்கள் களவாடப்பட்டுள்ளது என்பது தொடர்பாக சரியான விபரங்கள் தெரிவிக்கப்படவில்லை.

 இது தேர்தல் காலம் என்பதால் இவ்வாறான திருட்டு சம்பவங்கள் அதிகரிக்கலாம் எனவே பொது மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என பொலிஸார் எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.