சஜித் பிரேமதாச தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக வட மாகாணத்திற்கு விஐயம்!

2024 ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக  வட மாகாணத்துக்கு விஐயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள்,  ஆட்சிக்கு வந்ததன் பிற்பாடு தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்க்காக வேண்டி, ஆசி பெறும் பொருட்டு இன்று (31) காலை யாழ் நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். 

அதனைத் தொடர்ந்து யாழ். மறைமாவட்ட ஆயர் ஜஸ்டீன் பெர்னாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையைச் சந்தித்து தேர்தல் விஞ்ஞாபனத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்க்காக அவரது ஆசியையும் பெற்றுக் கொண்டார்.

வலையொளி இணைப்பு-