பரீட்சைகள் திணைக்களம் சிஐடியிடம்  விடுத்துள்ள கோரிக்கை!

பரீட்சைகள் திணைக்களம் சிஐடியிடம்  விடுத்துள்ள கோரிக்கை!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரின் விசாரணை அறிக்கையை பரீட்சைகள் திணைக்களம் கோரியுள்ளது.

மேலதிக முடிவுகளை எடுப்பதற்கு முன்னர் அறிக்கையை மீளாய்வு செய்ய வேண்டியதன் அவசியத்தை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர வலியுறுத்தினார்.

இந்தநிலையில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள் கசிந்தமை தொடர்பில் மேலும் பலர் கைது செய்யப்படவுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

விசாரணைகள் இடையூறு இன்றி நடைபெற்று வருவதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் உறுதிப்படுத்தினர்.