சட்டக் கல்லூரி தொடர்பில் ஜனாதிபதியின் தீர்மானம்!

இலங்கை சட்டக் கல்லூரி மாணவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில், அரசாங்கத்துக்கு சொந்தமான இடமொன்றைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சட்டக் கல்லூரி  தொடர்பில் ஜனாதிபதியின் தீர்மானம்!

நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் நேற்று இடம்பெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி இதற்கான இணக்கப்பாட்டை வெளியிட்டுள்ளார்

2024ஆம் ஆண்டில் 150 ஆவது வருட பூர்த்தியை கொண்டாடவிருக்கும் சட்டக்கல்லூரி 3 ஜனாதிபதிகளை உருவாக்கியுள்ளது என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார் 

சட்டக் கல்லூரியின் வசதிகளை மேம்படுத்துவதற்கு அவசியமான திட்டத்தை விரைவில் தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய ஜனாதிபதி, அதன் முதற் கட்டமாக 40 பேர்சஸ் காணியை ஒதுக்குமாறும், திட்டத்துக்கு அவசியமான மேலதிக இடப்பரப்பை நீதி அமைச்சுடன் கலந்தாலோசித்த பின்னர் பெற்றுக்கொடுக்குமாறும் பணிப்புரை விடுத்தார். 

இந்தநிலையில், ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமைய நகர அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான காணியொன்றை சட்ட கல்லூரிக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக, அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உறுதியளித்ததாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.