ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் பீடக் கூட்டம் நாளை!

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் பீடக் கூட்டம் நாளை!

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் பீடக் கூட்டம் நாளை கொழும்பில் நடைபெறவுள்ளது.

சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும், அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வாவினால் இந்தக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சிறிலங்;கா சுதந்திரக் கட்சியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பில் அங்கு கலந்துரையாடப்படும் என்று கட்சியின் பொருளாளரும் இராஜாங்க அமைச்சருமான லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

அத்துடன் எதிர்வரும் அரசியல் நிலைமைகள் தொடர்பில் பல தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்துக்குள் நுழைவதற்கு தொடர்ந்தும் தடை விதிக்கப்பட்டுள்ளாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கட்சி தலைமையகத்தில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

கட்சியின் அலுவலகத்தில் இருந்து சில அத்தியாவசிய ஆவணங்கள் காணாமல் போனது தொடர்பாக, கட்சியின் பதில் செயலாளர் சாரதி துஸ்மந்த மித்ரபால மருதானை காவல்துறையில் செய்த முறைப்பாட்டை அடுத்தே கட்சி அலுவலகத்துக்கு செல்வது தடுக்கப்பட்டுள்ளது.