வீதியோர யாசகர்களால் இலங்கை சர்வதேச வாய்ப்பை இழந்த சோகம்!

வீதியோர யாசகர்களால் இலங்கை சர்வதேச வாய்ப்பை இழந்த சோகம்!

2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்த SMMT சர்வதேச வாகன உச்சி மாநாட்டை இலங்கையில் நடத்துவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் போக்குவரத்து விளக்குகளில் உள்ள யாசகர்களின் அச்சுறுத்தலான செயற்பாடு இதற்கு தாக்கம் செலுத்தியதாக இலங்கை மோட்டார் வாகன உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் தேவப்பிரிய ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், "2015 இல் கொழும்பில் SMMT சர்வதேச வாகன உச்சி மாநாட்டுடன் தொடர்புடைய ஆசிய பசுபிக் பிராந்திய 2ஆம் கூட்டத்தை இலங்கை நடத்தியது.

இதில் 150 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

சர்வதேச வாகன உச்சி மாநாடு

2025 ஆம் ஆண்டு SMMT சர்வதேச வாகன உச்சி மாநாட்டை நடத்துவதற்கான முயற்சியை இலங்கை சமர்ப்பித்த போது ருவாண்டாவில் இடம்பெற்ற கூட்டத்தில் அது நிராகரிக்கப்பட்டது.

கொழும்பு நகர எல்லைக்குள் போக்குவரத்து விளக்குகளில் யாசகர்களின் அச்சுறுத்தல் காரணமாக SMMT சர்வதேச வாகன உச்சி மாநாட்டை இலங்கையில் நடத்த முடியாது என ருவாண்டாவில் நடைபெற்ற வருடாந்த பொதுக் கூட்டத்தில் பெறப்பட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெருநகர எல்லைக்குள் யாசகம் பெறுபவர்களுக்கு உதவித் தொகை வழங்குவது இலங்கையின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தனர்.

இறுதியில், நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நடைமுறைபடுத்த தீர்மானிக்கப்பட்டது.

மேலும் கொழும்பு நகர எல்லைக்குள் போக்குவரத்து விளக்குகளில் யாசகம் பெறுபவர்களுக்கு எந்த உதவியும் வழங்க வேண்டாம் என்று மோட்டார் வாகன உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் தேவப்பிரிய ஹெட்டியாராச்சி பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.