மன்னார் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கிவரும் கடல் ஆமைகள்

மன்னார் கடற்கரை பகுதியில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கிவரும் கடல் ஆமைகளை வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

மன்னார் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கிவரும் கடல் ஆமைகள்

கடந்த மூன்று தினங்களாக மன்னார் தென்கடல்  மற்றும் சிலாவத்துறை ஆகிய பகுதிகளில் அதிகமான கடல் ஆமைகள் இறந்த நிலையில் கடலில் மிதந்து வந்தன.

இதனைத்தொடர்ந்து, வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கரையொதுங்கிய கடல் ஆமைகளை மீட்டு வருகின்றனர்.

மழையுடனான காலநிலை காரணமாக  மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை கடற்பகுதிகளில் கடல்நீரில் உப்பின் செறிவு குறைந்தமையினால் கடலாமைகள் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட கடலாமைகளின் உடல்கள் பரிசோதனைகளுக்காக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக மன்னார் கடற்றொழில் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.