சுமந்திரனின் தாயாரின் பூதவுடல் பொரளை பொது மயானத்தில் நல்லடக்கம்

சுமந்திரனின் தாயாரின் பூதவுடல் பொரளை பொது மயானத்தில் நல்லடக்கம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனின் தாயாரான புஷ்பராணி மதியாபரணன் கடந்த மாதம் 27ஆம் திகதி கொழும்பு தெகிவளையிலுள்ள அன்னாரின் இல்லத்தில் காலமானார்.

இந்நிலையில் அன்னாரின் பூதவுடல் கடந்த 27, 28ஆம் திகதிகளில் அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து நேற்று வரை பொரளை றேமன்ட் மலர்ச்சாலையில் அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அன்னாரின் பூதவுடலுக்கு, அரசியல் தலைவர்கள், அரசியல் கட்சிப் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் தமது அஞ்சலிகளைச் செலுத்திவந்தனர்.

தொடர்ந்து நேற்றைய தினம் [01] பொரைளை பொதுமயானத்தில் அன்னாரின் பூதவுடல், சமய முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.