நாடாளுமன்ற கூட்டங்களில் பங்கேற்கப் போவதில்லை -  கெஹலிய 

நாடாளுமன்ற கூட்டங்களில் பங்கேற்கப் போவதில்லை -  கெஹலிய 

தரமற்ற மருந்துகளை கொள்வனவு  செய்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, நாடாளுமன்றக் கூட்டங்களில் பங்கேற்கப் போவதில்லை என நாடாளுமன்ற பொதுச் செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

மேலும், சுகவீனம் காரணமாக அவர் நாமடாளுமன்றக் கூட்டங்களில் பங்கேற்க மாட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கெஹலிய ரம்புக்வெல்ல விளக்கமறியலில் வைக்கப்பட்டதையடுத்து, அவரது செயலாளர் ஒருவரினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க,அவரை நாடாளுமன்ற கூட்டங்களில் பங்கேற்க வைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும்  செய்யப்பட்டிருந்தது.