வலம்புரி சங்கை கடத்திய பௌத்த தேரர் உட்பட இருவர் கைது

வலம்புரி சங்கை கடத்திய பௌத்த தேரர் உட்பட இருவர் கைது

மட்டக்களப்பு - கல்குடா பகுதியில் விற்பனைக்காக கடத்திவரப்பட்ட ஒரு கோடி ரூபாய் பெறுமதியான வலம்புரி சங்கு ஒன்றுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பௌத்த தேரர் ஒருவர் உட்பட இருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வலம்புரி சங்கு மாத்தறையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி எடுத்துச் செல்லப்பட்டபோது, விசேட அதிரடிப்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்குடா காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.