தலவாக்கலை கிறேட்வெஸ்டன்   காட்டுப்பகுதியில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு!

தலவாக்கலை - கிறேட்வெஸ்டன்  வனப்பகுதியிலிருந்து இன்று மாலை  பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தலவாக்கலை கிறேட்வெஸ்டன்   காட்டுப்பகுதியில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு!

தலவாக்கலை - கிறேட்வெஸ்டன்  வனப்பகுதியிலிருந்து இன்று மாலை  பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த பெண்ணின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லையென  தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர், கிறேட்வெஸ்டன் பகுதிக்கு சுற்றுலா சென்ற உள்நாட்டு சுற்றுலா பயணிகளில் ஒருவராக இருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.