“கொள்ளையர்கள் பிடியில் இருப்பது போன்று எம்மை தடுத்து வைத்தார்கள்” - மட்டக்களப்பில் நடத்த அராஜகம்! (பாதிக்கப்பட்டவரின் ரகசிய குரல்பதிவு இணைப்பு)

மட்டக்களப்பு மாவட்டத்தில் பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு சென்ற சர்வமத குழுவினர் மற்றும் சிவில் அமைப்பினர் அங்கு சட்டவிரோதமாக குடியேறியிருந்த சிலராலும் பௌத்த பிக்குகளாலும் சுற்றிவளைத்து தடுக்கப்பட்டதாக அங்கிருந்த ஒருவர் எமது செய்திச் சேவைக்கு குரல்பதிவொன்றை அனுப்பியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு சென்ற சர்வமத குழுவினர் மற்றும் சிவில் அமைப்பினர் அங்கு சட்டவிரோதமாக குடியேறியிருந்த சிலராலும் பௌத்த பிக்குகளாலும் சுற்றிவளைத்து தடுக்கப்பட்டதாக அங்கிருந்த ஒருவர் எமது செய்திச் சேவைக்கு குரல்பதிவொன்றை அனுப்பியுள்ளார்.

மயிலத்தமடு, மாதவனைப் பகுதிக்கு இன்றையதினம் (22) சென்ற சர்வமத தலைவர்கள், பண்ணையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை அங்கிருந்த பௌத்த மதகுரு தலைமையிலான காணி அபகரிப்பு குழு சுற்றி வளைத்தது.

தாம் அங்கிருந்து வெளியேற முடியாதவாறு தடுத்து வைக்கப்பட்டதாகவும்,  ஊடகவியலாளர்களின் கமராக்கள் பிடுங்கப்பட்டு அதிலிருந்த காணொளிகள் அழிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தாம் ஒரு கொள்ளைக் கூட்டத்தின் பிடியில் சிக்கியிருந்தது போன்று உணர்ந்ததாகவும் அவர் தெரிவித்தார்.