மதுபான விற்பனை நிலையத்துக்கு முன்பாக குயில்வத்தை பகுதி மக்கள் போராட்டம்!

மதுபான விற்பனை நிலையத்துக்கு முன்பாக குயில்வத்தை பகுதி மக்கள் போராட்டம்!

ஹட்டன் கொழும்பு வட்டவளை குயில்வத்தை பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட மதுபான விற்பனைக்கான அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் மதுபானசாலை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து  தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டவுள்ளதாக தோட்ட தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குயில்வத்தை பகுதியில் புதிய மதுபானக்கடை திறப்பதற்கு அரசாங்கம் புதிய அனுமதிப்பத்திரம் வழங்கியமைக்கு எதிராக தோட்ட தொழிலாளர்கள், பிரதேசவாசிகள் மற்றும் பாடசாலை மாணவர்கள் ஒன்றிணைந்து மதுபானக்கடை திறக்கப்படவுள்ள இடத்திற்கு முன்பாக கடந்த சில நாட்களாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமக்கு இதுவரையில் உயர்த்தப்பட்ட 1700 ரூபா சம்பளத்தை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், தற்போதுள்ள நாளாந்தம் 1000 ரூபா சம்பளத்தில் கூட வாழ முடியாது இந்நிலையில் புதிய மதுக்கடையைத் திறப்பதற்கான அனுமதி பத்திரம் வழங்கியமை எம்மை பொருளாதாரத்தில் மேலும் வீழ்ச்சியடைய செய்யுமென தோட்டமக்கள் தெரிவித்துள்ளனர் .