நிராகரிக்கப்பட்ட வியாழேந்திரனின் வேட்பு மனு!

நிராகரிக்கப்பட்ட வியாழேந்திரனின் வேட்பு மனு!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் ஜனநாயக தேசிய முன்னணி கட்சியின் சார்பில் கையளித்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல் செய்யும் செயற்பாடுகள் நேற்று (11.10.2024) நண்பகல் 12 மணியுடன் நிறைவுக்கு வந்துள்ளன.

இந்நிலையில், சத்தியக் கடதாசியை சமர்ப்பிக்க தவறியமையினால் வியாழேந்திரனின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் அரசாங்க அதிபர் தலைமையில் கூட்டம் கூட்டப்பட்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.