பதுளை தெமோதரயில் பேருந்து விபத்து - 15 பேர் படுகாயம் (காணொளி)

பதுளை - தெமோதர நீர் விநியோக சபைக்கு அருகில் தனியார் பேருந்து ஒன்று இன்று காலை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

பதுளை - தெமோதர நீர் விநியோக சபைக்கு அருகில் தனியார் பேருந்து ஒன்று இன்று காலை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

கொழும்பு மற்றும் பதுளைக்கு இடையில் சேவையில் ஈடுபடும் பேருந்து ஒன்றே விபத்துக்குள்ளானது.

பேருந்து முற்றாக தலைகீழாக கவிழ்ந்துள்ளதுடன் விபத்துக்கு சாரதியின் நித்திரை மயக்கமே காரணமாக இருக்கும் என ஆரம்பவிசாரணையில் தெரியவந்துள்ளது. 

விபத்து காரணமாக பேருந்தில் பயணித்த 15 பேர் வரை காயமடைந்ததுடன், அவர்கள் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் எல்ல பகுதி பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.