வடக்கு நீர் வழங்கல் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்!

இலங்கை மக்களுக்கு சுத்தமாக குடிநீரை வழங்கும் நோக்கில் வடக்கு நீர் வழங்கள் திட்டத்தின் முதலாம் கட்டம் இன்று அநுராதபுரத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

வடக்கு நீர் வழங்கல் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்!

JICA எனப்படும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் நிதியுதவியுடன் குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் JICA எனப்படும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் தலைவர் டனகா அகிஹிக்கோ ஆகியோரால் குறித்த நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

 நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சரின் அழைப்பிற்கு அமைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் JICA எனப்படும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் தலைவர் ஆகியோர் குறித்த நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.

இதேவேளை, விவசாயிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.