மக்களுக்காக அனைவரும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அழைப்பு!

நாட்டு மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை வழங்குவதற்கு அனைத்து தரப்பினரையும் ஒன்றிணையுமாறு மீண்டும் அழைப்பு விடுப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மக்களுக்காக அனைவரும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அழைப்பு!

 ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அரசியல் ரீதியாக பிரிந்து நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது எனவும், அரசாங்கத்திற்காகவோ எதிர்க்கட்சிக்காகவோ அல்லாது நாட்டு மக்களுக்கு வளமான வாழ்க்கைத் தரத்தை வழங்குவதற்கு அனைத்து தரப்பினரும் ஒன்றிணையுமாறும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.