வடக்கில் ஜனாதிபதி ரணில் வழங்கிய உறுதிமொழிகள் - விரிவாக!

மாகாண மட்டத்தில் வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் போதுமானது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

வடக்கில் ஜனாதிபதி ரணில் வழங்கிய உறுதிமொழிகள் - விரிவாக!

எனவே, அவற்றில் மத்திய அரசாங்கம் தலையிடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் தொழில் வல்லுநர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

அதிகாரப் பகிர்வு என்பது ஒரு அரசியல் எண்ணக்கருவாக மாத்திரம் அன்றி, பொருளாதார அடிப்படையிலும் யதார்த்தமாக அமைய வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

அதேபோன்று, மாகாண மட்டத்தில் சுயாதீன பொருளாதாரத்தை உருவாக்குவது தொடர்பிலான தெரிவை ஜப்பான், கொரியா, பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகளிடமிருந்து பெற்றுக்கொள்ளுமாறும், 13ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை தங்களது மாகாணத்தின் அபிவிருத்திக்காக தொடர்ச்சியாக பயன்படுத்த வேண்டுமெனவும் அனைத்து மாகாணங்களினதும் மக்கள் பிரதிநிதிகளிடமும் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

2019 ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் நாட்டின் பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்தது.

2020ஆம் ஆண்டில் கொவிட் தொற்று காரணமாக மேலும் பொருளாதாரம் சரிவடைந்தது.

அந்த நெருக்கடியான காலத்தை கடந்து 2023 ஆம் ஆண்டில் ஓளரவு பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும் இயலுமை கிட்டியுள்ளது.

2023ஆம் ஆண்டில் முதல் இரு காலாண்டுகளில் பொருளாதார வளர்ச்சி குறைவாக காணப்பட்ட போதிலும் அடுத்த இரு காலாண்டுகளில் வளர்ச்சி ஏற்பட்டது.

குறிப்பாக நான்காம் காலாண்டியில் முன்னேற்றகரமான வளர்ச்சியை காண முடிந்துள்ளது.

வடக்கு மாகாணத்தை தனித்துவமான பொருளாதார மையமாக கட்டியெழுப்ப முடியும்.

மேலும், வடக்கை புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மையமாக உருவாக்க முடியும்.

வட மாகாணத்தின் அபிவிருத்திக்குத் தேவையான அனைத்து வளங்களும் இங்கு உள்ளன.

அதற்கு போதுமான அதிகாரப்பகிர்வு ஏற்கனவே இடம்பெற்றுள்ளது.

அந்த செயற்பாடுகளுக்கு 13ஆவது திருத்தத்தின் மூலம் கிடைத்துள்ள அதிகாரங்களே போதுமானது

கொழும்பில் இருந்து பணம் கிடைக்கும் வரை காத்திருக்காமல் அனைவரும் ஒன்றிணைந்து இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு தாம் கோரிக்கை விடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.