அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடுகளில் 81 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடுகளில் 81 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவில் கடந்த ஒன்றரை மாதங்களில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் சுமார் 81 பேர் உயிரிழந்தனர்.

இந்த வருடத்தின் முதல் ஒன்றரை மாதங்களில் மாத்திரம் 49 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இன்று காலை கன்சாஸ் சிட்டி பகுதியில் நடைபெற்ற சுப்பர் பவுல் போட்டியின் வெற்றியை கொண்டாடும் பேரணியை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 21 பேர் காயமடைந்துள்ளனர்.