இலங்கை அமைச்சர் சனத் நிஷாந்த வீதி விபத்தில் உயிரிழப்பு! (படங்கள்)

இலங்கை அமைச்சர் சனத் நிஷாந்த வீதி விபத்தில் உயிரிழப்பு! (படங்கள்)

இலங்கையின் நீர்விநியோகத்துறை இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த இன்று (25) அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கிச் செல்லும் அதிவேக நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் பாதுகாப்பு அதிகாரியொருவரும் உயிரிழந்தனர்.

அமைச்சர் பயணம் செய்த வாகனம் கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளான நிலையில், முதலில் அமைச்சர் சனத் நிஷாந்த உட்பட 3 பேர் காயங்களுடன் இராகம மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக ராகம மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

மேலும் அமைச்சருடன் விபத்தில் சிக்கிய அவரது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி கான்ஸ்டபிள் ஜெயக்கொடியும் உயிரிழந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.